பாலாஜி மோகனும் அருணாவும் 2012ம் ஆண்டு திருமணம் செய்தார்கள். பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். தற்போது முறையாக விவாகரத்து பெற்று விட்டதாக பாலாஜி மோகன் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
‘என் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் என் விவாகரத்து குறித்து கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் வதந்திகளாக அறிவதற்கு முன்னால்.
என்னுடைய முன்னாள் மனைவியுடன் கருத்துவேறுபாடுகள் காரணமாக 3 வருடங்கள் முன்பு பிரிந்துவிட்டேன். பிறகு இருவருடைய சம்மதத்தின் பேரில் விவாகரத்து மூலம் திருமண உறவு முறிந்துள்ளது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன.
இது ஒரு சுமுகமான பிரிவு. இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டோம். இது தொடர்பான எங்கள் தனிப்பட்ட உணர்வுகளை மதிப்பீர்கள் என எண்ணுகிறேன்’ என்று கூறியுள்ளார்.