துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்துவான் முஸ்லீம்களை கருத்தடைகளை நிராகரித்து நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
துருக்கி நாட்டு தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பில் பேசிய எர்துவான் எந்தவொரு முஸ்லீம் குடும்பமும் குழந்தை பிறப்பு கட்டுப்பாடுகளை பற்றி யோசிக்க கூடாது என்றும் கட்டாயமாக வாரிசுகளை பெருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் துருக்கி ஜனாதிபதி குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டதற்கும் ஆண் பெண் இருவரும் பிறப்பால் சமம் என்ற கருத்தை நிராகரித்து பேசியதற்காகவும் மகளிர் அமைப்புகளின் விமர்சனங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.