நடிகர்/ நடிகைகள் சிறைக்கு சென்றால் மிகவும் பிரபலம் ஆகிவிடுவார்கள். ஏறத்தாழ தேசிய நாளேடுகளில் இருந்து, லோக்கல் நாளேடுகள் வரை, தொலைக்காட்சி, ரோடியோ என அனைத்திலும் அவர்கள் பெயர் தான் இடம்பெற்றிருக்கும்.
சல்மான் கான், சஞ்சய் தத் போன்ற பிரபலங்கள் வழக்கில் மாட்டிக் கொண்டு நீதிமன்றம் அவர்களை சிறைக்கு அனுப்பியதை நாம் அறிந்திருப்போம்.
ஆனால், இந்திய நடிகைகளும் சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர், சிறைக்கு சென்றுள்ளனர் என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் பெரும்பாலானோர் இந்தி திரையுலகை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது…
சோனாலி பிந்த்ரே
காதலர் தினம் படத்தின் மூலமாக தமிழக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. இவர் மதம் சார்ந்த நம்பிக்கைகளை, உணர்சிகளை காயப்படுத்தியர்தற்காக கைது செய்யப்பட்டார்.
இவர் ஓம், ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை அச்சடித்த மஞ்சள் நிற குர்தா அணிந்து வந்தது தான் கைதிற்கான காரணியாகவும், பிரச்சனையை அமைந்தது. பிறகு இவரும், அந்த ஆடையை வடிவமைதவரும் பெயில் பெற்று வெளிவந்தனர். மேலும், 12,000 ரூபாய் அபராதமும் கட்டினர்.
சானா கான்
சிலம்பாட்டம் படத்தின் மூலம் நன்கு பரிச்சயம் ஆனவர் சானா கான். இவர் மற்றும் இவரது காதலர் ஓர் பெண்மணியை அச்சுறுத்தியதற்காகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து வெளியே இழுத்து வந்ததாகவும், அடித்ததாகவும், கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து, சானா கான், அவரது காதலர் மற்றும் வேலைக்காரர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்வேதா பாசு
2002-ம் ஆண்டு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு. “கொத்த பங்காரு லோகம்” எனும் தெலுங்கு படத்தின் மூலம் நல்ல பிரபலம் அடைந்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதத்தில், கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
2014-ம் ஆண்டு ஐதராபாத்தில் ஓர் ஹோட்டலில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா பாசு, இரண்டு மாதம் வீட்டு காவலில் இருந்தார். பிறகும், இவரை விடுவித்தனர்.
மோனிகா பேடி
பாலிவுட் நடிகை மோனிகா பேடி கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்த அபு சலீமுடன் தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டார். இவர் இந்தி திரைப்படங்களில் உயரிய இடத்தில் இருந்தவர் ஆவார்.
போலி ஆவணங்கள் கொண்டு வெளிநாடு சென்றதற்காக இவர் கைது செய்யப்பட்டார். மோனிகா பேடியை போர்ச்சுகல் போலீசார் கைது செய்து அபராதமும் விதித்தனர். இவர் இரண்டு வருடம் போர்ச்சுகல் சிறையில் இருந்தார்.
மம்தா குல்கர்னி
90-களில் நடிகையாக இருந்த மம்தா குல்கர்னி மற்றும் இவரது கணவர் விக்கி கோஸ்வாமியை கென்யா போலீசார் போதை பொருள் கடத்தியதற்காக கைது செய்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட, தானே போலீஸ் இவரை சர்வதேச போதை பொருள் கடத்தல் சம்பவம் ரீதியாக விசாரணை செய்தனர் எனவும் கூறப்படுகிறது.
மதுபாலா
சில தகவல்களின் படி, நடிகை மதுபாலா 1957-ல் ஒப்புக் கொண்டதற்கு இணங்க படத்தில் நடிக்கவில்லை என்பதற்காக கைது செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
பி.ஆர். சோப்ரா எனும் பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையழுத்திட்டு, அட்வான்ஸ் பணம் பெற்று இவர் பிறகு நடிக்கவில்லை என கூறப்படுகிறது.