நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் திடீர் நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சரத்குமாரிகன் உடல்நலம் குறித்து வெளிவந்த செய்திகளுக்கு அவரது மனைவி ராதிகா சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சரத்குமாரின் உடல்நிலை குறித்து வெளிவந்த செய்திகளில் உண்மையில்லை. தேவையில்லாமல் தவறான செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவருக்கு புட் பாய்சன் மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்றார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சரத்குமாரின் உடல்நிலை குறித்து வெளிவந்த செய்தி, சினிமா உலகத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.