தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான வியட்நாம் வீடு சுந்தரம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
1943 ஆம் ஆண்டு பிறந்த இவர், தொழிற்சாலை ஒன்றில் பணியாளராக தன் வாழ்வைத் துவங்கினார். பிறகு அமெச்சூர் நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.
அதிலிருந்து நாடகங்களை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு, வியட்நாம் வீடு உள்ளிட்ட நாடகங்களை எழுதினார்.
இந்த நாடகம், சிவாஜி நடிப்பில் மாதவன் இயக்கத்தில் படமாக்கப்பட்டது. அதிலிருந்து வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டவர், சிவாஜி நடித்த கௌரவம், விஜயா, ஞானப்பறவை ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார்.
அப்பு, கண்ணாமூச்சி ஏனடா ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் இவர், 15-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை – வசனம் ஆகியவற்றை எழுதியிருக்கும் சுந்தரம், மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார்.
வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு மனைவியும் மகளும் உள்ளனர்.