இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடந்த தனித்தனி சம்பவங்களில், இரண்டு இளம் குழந்தைகள் உள்ளிட்ட மூவர் பட்ட நூலால் கழுத்தறுக்கப்பட்டு இறந்துள்ளனர்.
பட்டம் விடும் போட்டியில், மற்ற பட்டங்களின் நூல்களை அறுப்பதற்காக கண்ணாடி துண்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும் பட்டத்தின் நூலால் தங்கள் கழுத்தறுக்கப்பட்டு மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில், தன் குடும்பத்துடன் திரைப்படம் பார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமியும் அடக்குவார். காரில் உள்ள சன் ரூஃ ப் வசதியை விட்டு சாலையில் எட்டிப் பார்த்த போது, சிறுமியின் கழுத்து சாலையில் பறந்து கொண்டிருந்த பட்ட நூலால் அறுபட்டது.
இதே போன்ற சம்பவத்தால் ஒரு நான்கு வயது சிறுவனும் இறந்துள்ளான்.
டெல்லியில் தற்போது இது போன்று பிரத்யோகமாக கூர்மையாக்கப்படும் நூல்களுடன் பட்டங்கள் விட அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.