பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருந்து சிதாமார்கி என்ற இடத்துக்கு தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. பேருந்தில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த பேருந்து பாசிதா கிராமத்துக்கு அருகே சென்ற போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் 25 அடி ஆழம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. ஆழமான குளம் என்பதால் பேருந்து முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் இந்த கோர விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.