பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் தொடரி.
ரெயிலிலேயே எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையுடன் உருவான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 4 நாளில் மட்டும் ரூ. 10.5 கோடி வரை வசூலித்துள்ளது.
இனிவரும் நாட்களிலும் படம் அதிகம் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.