பிரபல இந்தி நடிகர் அமீர்கான். இவர் மனைவி கிரண் ராவுடன் மும்பை பாந்திரா கார்டர் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த வாரம் கிரண் ராவ் வீட்டில் உள்ள நகைகளை சரிபார்த்தார். அப்போது அதில், ரூ.50 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் மோதிரம் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நடிகர் அமீர்கானின் உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக போலீசார் அமீர்கான் வீட்டில் பணிபுரிந்து வரும் வேலைக்காரர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. காலையில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்படும் வேலைக்காரர்கள் மாலையில் தான் திரும்ப விடப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து நடிகர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண்ராவ் கருத்து கூற மறுத்துவிட்டனர்.