ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 நள்ளிரவு காலமானார் என செய்திகள் வந்ததை தொடர்ந்து பயங்கர பதற்றம் நிலவியது.
ஒரே நாளில் அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவரது இறப்பில் மர்ம இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பழனியில் தியானம் கற்றுக்கொடுக்கும் அசோக் ஜி என்பவர் ஏற்கனவே அவர் எப்போதெல்லாம் ஜெயலலிதா ஜெயிப்பார் என சொல்லிருக்கிறாரோ அப்போதெல்லாம் ஜெ தேர்தலில் ஜெயித்திருக்கிறார்.
கடந்த வருடம் கூட முன்கூட்டியே ஜி சொன்னது போல சென்னையில் மழை, வெள்ளம் வந்ததாம். இப்போது அவர் ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் இவரது உடலில் தான் இருக்கிறது, வெளியேறவில்லை.
ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள், சாங்கியங்கள் எதுவும் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.
அவரது ஆவி தீராத ஆத்திரத்தோடு இருக்கிறது. அவரை அவமானப்படுத்தியவரையும், பழிவாங்கியவரையும், விடாது. உயிர் பிரியும் நேரத்தில் அவரிடம் உண்மையில்லாமல் இருந்தவர்களுக்கு கண்டிப்பாக தண்டனையுண்டு.
அவரது உடமைகளை, சொத்துக்களை அபகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை அவர் கொடுப்பார் என அவர் கூறியுள்ளார்.
பிரேமானந்தா, காஞ்சி பெரியவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட காலத்தில் நான் ஜெயலலிதா தோற்பார் என்றேன். எனக்கு மிரட்டல் வந்தது. ஆனால் நான் சொன்ன படியே நடந்தது.
2023 வரை பழி வாங்கும் படலம் தொடரும். இதை நான் நிரூபிப்பேன். எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தாலும் பரவாயில்லை. நடக்கப்போவதை சொல்வது எனது கடமை. ஜெ மறுபிறவி எடுப்பதற்கு இன்னும் 6 வருடங்கள் ஆகும் என அவர் கூறியுள்ளார்.