பாராளுமன்ற கட்டிடத்தில் அறை எண் 50-ல் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் லேசான தீவிபத்து ஏற்பட்டது. பாராளுமன்ற தொலைக்காட்சிக்கு உரிய அந்த அறையில் இருந்த யு.பி.எஸ். சாதனத்தில் தீப்பிடித்துக் கொண்டதால், சுற்றிலும் புகை பரவியது.
அங்கு இருந்தவர்கள் அதை கவனித்து, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனே 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 15 நிமிடத்தில் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. நல்லவேளையாக, இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.