நவி மும்பையின் சிபிடி பெலபூர் பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் மாத்ரே. இவர் ஒரு பாம்பு பிடிப்பவர். சோம்நாத் தான் பிடித்த நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட்ட போது அந்த பாம்பு திருப்பி அவரை கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் குறித்து அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பாம்பு பிடிப்பவர் கூறுகையில், “சோம்நாத்தின் நண்பர்கள் அளித்த தகவலின் படி, அவர் பெலபூர் பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கு ஒரு காரில் இருந்து பாம்பு பிடித்தார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பகுதிக்கு பாம்பை கொண்டு சென்றுள்ளார். அங்கு எல்லோர் முன்பும் பாம்பின் தலையில் சோம்நாத் முத்தமிட முயன்றுள்ளார். அப்போது திடீரென பாம்பு அவரது கன்னத்தில் கடித்து விட்டது”
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோம்பாத் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளார்.
இதற்கு முன்பாக சதாரா என்ற பாம்பு பிடிப்பவரும் பாம்பிற்கு முத்தமிட முயன்று இறந்தார். கடந்த 12 வருடங்களில் மட்டும் 31 பாம்பு பிடிப்பவர்கள், கடிபட்டு இறந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நிகழாமல் இருக்க உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.