லோக்சபா எம்.பி.,யை மயக்கி, ஆபாச போட்டோ எடுத்து ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்ணை டில்லி பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த லோக்சபா எம்.பி., வி.சி பட்டேல் டில்லி பொலிஸில் சமீபத்தில் ஒரு முறைப்பாடு அளித்துள்ளார்.
அதில், ‘ பெண் ஒருவர் உதவி கேட்டு என்னிடம் வந்தார். காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவர் அளித்த குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து என்னை நினைவிழக்க செய்து விட்டார்.
நான் நினைவு திரும்பி எழுந்த போது, ஐந்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்.
அந்த பெண்ணுடன் மேலும் சிலரும் இருந்தனர். பணத்தை தராவிட்டால், என்னை வைத்து அந்த வீட்டில் எடுக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாக மிரட்டினர்.
பொலிஸில் பொய் முறைப்பாடு அளிப்போம் என்றும் மிரட்டினர்’ என, தெரிவித்துள்ளார்.
எம்.பி., ஒருவர் இப்படிப்பட்ட முறைப்பாடு அளித்து இருப்பதை சிறப்பு ஆணையாளர் முகேஷ் மீனாவும் உறுதி செய்தார்.
பொலிஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.
அந்தப் பெண் கடந்த ஆண்டு இதேபோல், ஒரு எம்.பி., மீது பொலிஸ் பொய் முறைப்பாடு அளிக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.