ரஜினி – பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தப் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.
அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தப் படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் திகதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.