‘பாகுபலி 2’ படத்தின் வசூலைப் பற்றி இன்னும் சில நாட்களுக்குப் பேசிக்கொண்டே இருக்கலாம். இப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்கவேண்டும்.
இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான பல படங்களைப் பார்த்துவிட்டு அரங்குகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என நினைப்போம். ‘பாகுபலி 2’ படத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை.
திருட்டு விசிடி, கேபிள் டிவி உள்ளிட்ட பல விஷயங்கள் இருந்தாலும் இதன் பிரம்மாண்டத்தை அனைவருமே திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்பியுள்ளார்கள்.
ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியுள்ளனர். திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்தவர்கள்கூட அதன் பிரம்மாண்டத்தைக் காண திரையரங்குக்குச் செல்கிறார்கள்.
மற்றொரு முக்கியமான விஷயம், இக்கதையில் பேண்டஸி கிடையாது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது. அதேநேரத்தில், அனைத்து மக்களும் ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காதல், காமெடி, பழிவாங்கல், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் சேர்ந்த கலவையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.