குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள ரனோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சோலங்கி என்பவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில், திருமணம் செய்வதற்கு சென்ற மணமகன் சோலங்கி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார்.
இந்த சம்பவம் அவரது உறவினரை சோகத்தில் ஆழ்த்தியது.
கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது.
முன்னதாக, திருமணம் நடைபெறும் இடத்திற்கு மணமகன் சோலங்கி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
ஊர்வலகத்தின் போது சிலர் சந்தோஷத்தில் நடனமாடினர்.
அவர்களுடன் சோலங்கியும் சேர்ந்து ஆடினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நண்பரின் தோள்களில் சோலங்கி தடுமாறி விழுந்தார்.
கீழே விழுந்தவுடன் அவர் நிலை குலைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் மணமகன் சோலங்கி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.