தென்னிந்திய நடிகைகளில் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்தவர் அனுஷ்கா.
பார்த்து பார்த்து கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பவர்.
அதே நேரத்தில் அனுஷ்கா பற்றிய கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் இருக்காது.
இயக்குநர் க்ரிஷ், ஆர்யா, ராணா, நாகார்ஜுனா என்று அனுஷ்காவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர்கள் ஏராளம்.
அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் பிரபாஸ்.
தம்மைப் பற்றி இவ்வளவு கிசுகிசுக்கள் பரப்புவது யார் என்று கண்டுபிடித்து விட்டாராம் அனுஷ்கா.
தன்னுடைய உதவியாளர் ஒருவர் மூலம்தான் வெளியில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் செல்கின்றன என்பதை அறிந்து அந்த உதவியாளரை வேலையில் இருந்து தூக்கிவிட்டாராம்.
அப்படீன்னா… வந்த தகவல்கள் எல்லாம் உண்மைதானோ?