நாட்டுக்காகப் பணியாற்றும்போது மறைந்த மத்திய ரிசர்வ் படை மற்றும் ராணுவக் குடும்பங்களுக்கு உதவி செய்வதால் நடிகர் அக்ஷய் குமாருக்கு மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளன.
கடந்த வாரம் நக்சல்பாரி இயக்கத்தின் 50-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மத்திய இந்தியப் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அந்தப் பிரசுரங்களில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் மற்றும் நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆகிய இருவருக்கும் வெளிப்படையான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதில், ”மறைந்த ராணுவ வீரர்களுக்கு உதவுவதை இருவரும் நிறுத்தவேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ’ராணுவ வீரர்களுக்கு உதவுவதை விடுத்து எங்களைப் போன்ற புரட்சியாளர்களுக்கு உதவுங்கள்’ என ஹிந்தி மற்றும் கோந்தி மொழிகளில் பிரசுரங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த வருடம் மறைந்த 12 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நடிகர் அக்ஷய்குமார் ஒன்பது லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.
மேலும், மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் ஒரு ‘மொபைல் ஆப்’ ஒன்றும் செயல்படுத்த உதவினார்.
இதுபோலவே விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகின்றார்.