முதல்வர் பழனிசாமியை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
பெண்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் இந்த இயக்கத்தைத் துவக்கியவர் #saveshakti என்ற ஹேஷ்டேக்குடன் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக தனது பிரச்சாரத்தைத் துவக்கினார். பல நடிகர் நடிகைகள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்குப்பெற்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவக்கி வைக்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கம் குறித்து மாநில அரசுக்கு ஒரு மனுவாகக் கொடுக்கவிருப்பதாக முன்னர் நடிகை வரலட்சுமி தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்திலேயே சந்தித்தார் நடிகை வரலட்சுமி.
இந்த ‘சேவ் சக்தி’ என்ற இயக்கம் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அனைவரும் பெண்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்துகிறார்.