பிரபல நடிகை குஷ்பு தற்போது சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமின்றி தீவிர அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.
ட்விட்டரில் மிக அக்டிவாக இருப்பவர்களில் அவரும் ஒருவர். அரசியல் பிரச்சனைகள், சினிமா பற்றி தினமும் பதிவிட்டு வந்த அவர் தற்போது ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
“ட்விட்டரை தொடர்ந்து பயன்படுத்துவதால் அதற்கு அடிமையாகிவிட்டேன், அதனால் கொஞ்சம் நாட்கள் விலகி இருக்கிறேன்” எனவும்.
“Bye friends.. ட்விட்டரை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள், பிரிப்பதற்காக அல்ல” என கூறியுள்ளார்.