நடிகை கஸ்தூரி தன் மனதில் பட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் தற்போது டிவிட்டரில் ஓட்டெடுப்பை ஆரம்பித்துள்ளார்.
சமீபத்தில் உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவம் நாடு முழுவது அதிரவலைகளை ஏற்படுத்தியது.
சம்மந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் ஆக்ஸிஜன் வழங்குவதன் பேரில் கமிஷன் வாங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவ்வழக்கில் சம்மந்தபட்டுள்ள அதிகாரிகள் ஹீரோவாக செயல்பட்டார்களா, திருடர்களாக செயல்பட்டார்களா என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என ஒரு போலிங் போட்டுள்ளார்.