நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே சென்ற பிறகு அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல இயக்குனர்கள் முயன்று வருகிறார்கள்.
அவர் இன்னும் போன் ஆன் செய்யவில்லை என தமிழ் படம் 2 இயக்குனர் அமுதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் ஷங்கர் தன் அடுத்த படத்தில் ஓவியாவை நடிக்கவைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
”சினிமாவை பார்க்காதவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். ஹவுஸ் மேட்ஸ் எல்லோரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக வீட்டில் இருப்பவர்களின் மனதில் பதிந்துவிட்டனர். அதனால் அவர்களின் மார்கெட் நிலைமை சற்று அதிகம்தான். என் படத்தில் ஓவியா நடித்தால் நன்றாகயிருக்கும் என்றிருந்தால் அவரை நடிக்க வைப்பேன்’’ என அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.