என் வயிற்றில் ஒரு வேற்றுகிரகவாசியை கொண்டிருப்பதுபோல எனக்கு பயமாக இருக்கிறது “என்கிறார் சமந்தா. அவருக்கு மகப்பேறு மற்றும் பிரசவம் பற்றிய தீவிர பயமான டோக்கோஃபோபியா உள்ளது.
உலகம் முழுவதும் 14 சதவீத பெண்கள் இத்தகைய பயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு மதிப்பிட்டுள்ளது.
இதுவே எப்போதும் என் மனதில் இருக்கிறது” என்கிறார் 26 வயதான சமந்தா. “கர்ப்பிணிப் பெண்களை பார்க்கும்போது எனக்கு பைத்தியம் பிடிக்கிறது, கர்ப்பம் அல்லது குழந்தை பிறப்பு பற்றிப் பேசுவதும் கூட எனக்கு அதிர்ச்சி, வியர்வை மற்றும் கவலை அளிக்கிறது என்கிறார் அவர்.
டோக்ஃபோபியா, கர்ப்பம் அல்லது பிரசவம் பற்றி நரம்புகளில் உணரப்படும் வித்தியாசமாக உணர்வு, பல பெண்களுக்கு இயல்பானது என்கிறது குழந்தைகள் தொண்டு நிறுவனமான, டாமி
தீவிர டோக்கோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கர்ப்பத்தை தவிர்க்கும் அளவுக்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ரிகா இவ்வாறு கூறுகிறார்: டோக்ஃபோபியா கொண்ட பெண்கள் சிலர் கருக்கலைப்புக்களை செய்து கொண்டுள்ளனர்,
ஏனென்றால், அவர்கள் கர்ப்ப காலம் பற்றிய பயம் மற்றும் கர்ப்பத்தை தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக என்கிறார் குவ், டோகோஃபோபியாவால் பாதிக்கப்படும் பெண்களுக்கு கருத்து அமர்வுகள் நடத்தும் பயிற்சியாளர் ரினா காவ்.
சமந்தா வாரந்தோறும் சிகிச்சைக்கு செல்கிறார், ஆனால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு இது தொடர்பாக உதவுவதில்லை என்றும், “இது ஒரு பெரிய விடயமல்ல” மற்றும் “நீ அதிகப்படியாக நடந்துகொள்கிறாய்” என்று அவர்கள் கூறுவதாக சமந்தா கூறுகிறார்
“என் கணவர் பல வருடங்களாக குழந்தை வேண்டும் என்று விரும்பினார், “ஆனால் நான் அதனை தவிர்ப்பதற்காக மாத்திரை உட்கொண்டு வந்தேன். தற்போது உடலுறவை தவித்து வருகிறேன். ஏனெனில் பிரசவம் பற்றி நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது”என்கிறார் அவர்.
அவர் மேலும் கூறுகிறார்: “என் சுவாசம், விந்தணுக்கள், விலா எலும்புகள் ஆகியவற்றை உதைத்து, சுவாசிக்கும்போது என் மனதை மறைக்க முடியாது. அதைச் செய்ய முடியும் என இயன்றதை நான் அறிந்திருந்தாலும் கூட, என் உடல் அதைச் செய்யவதை நம்பவில்லை. ”
இங்கு நிறைய பெண்கள் வருகிறார்கள் மேலும் அவர்களுக்கு டோக்கோஃபோபியாவுடன் இது மனகவலை கோளாறுகளும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார் சோஃபியா கிங் என்ற ஒரு செவிலித்தாய்.
பிரிட்டனில் 8.2 மில்லியன் வழக்குகள் மனநலக்கோளாறு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக மனநல சுகாதார அறக்கட்டளையின் சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் 16லிருந்து 24 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்களை விட 3 மடங்கு அதிகமாகும்.
ரினாவின் கலந்தாய்வு ஆலோசனைகள் தன் பயத்தை போக்கி பிரசவத்தை சமாளிக்க உதவியதாக கூறுகிறார் டன்பிலேமை சேர்ந்த லௌரா. தற்போது அவருக்குஒரு மகன் இருக்கிறார்.
“டிவி மற்றும் திரைப்படங்களில் பயமுறுத்தும் விதமாக பிரசவம் தொடர்பான காட்சிகளை பார்த்துவிட்டு, குழந்தை பிறப்பு பற்றிய செய்திகளைப் தவறாகப் புரிந்துகொண்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன்,” லௌரா கூறுகிறார்.
தன் தோழியின் பிரசவம் “ஆறு நாட்கள் நீடித்தது” என்றும், அந்த தருணதில்தான் இரண்டாக பிளவுபடுவது போல” உணர்ந்த்தாகவும் தன் குடும்பத்தினரிடம் அவர் கூறியிருக்கிறார். இதனால் பிரசவத்தை சமாளிக்க தனக்கு மிகவும் வேதனையானதாக இருக்கும்” என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக உறைந்து போனது என்கிறார். லௌரா, ”
லெளரா எப்போதுமே ஒரு குடும்பத்தை விரும்பினாலும், கர்ப்பமாக இருந்ததை அவர் கண்டுபிடித்தபோது ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்தாலும் பின்பு கடவுளே, நான் பிரசவத்தை எப்படி சமாளிப்பேன் என்று உணர்வு மேலோங்கியதாக அவர் கூறுகிறார்.
இரண்டு வகை டோக்கோஃபோபியா உள்ளன: ஒன்று, முதல்முறை கர்ப்பமாக இருந்த பெண்களில் இது நிகழ்கிறது, இரண்டாவதாக, ஏற்கனவே அதிர்ச்சிகரமான பிரசவத்தை அனுபவித்த பெண்களை பாதிக்கிறது, மேலும் மீண்டும் அதே விஷயத்தைச் சந்திப்பதாக அவ்ர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது என்கிறார் சோபியா
“என்னுடைய அனுபவத்தில், முதன்மை டோக்கோஃபோபியாவால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் கடந்த காலத்தில் கருப்பை கோளாறுகளை கொண்டிருக்கலாம், மருந்தியல் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் அல்லது மனச்சோர்வு அல்லது மனநல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
பிரசவத்தின்போது சுயகட்டுப்பாடு இழப்பு” மற்றும் “முந்தைய அதிர்ச்சிகரமான அனுபவங்கள்” பெண்களின் பிரசவ உறுப்பில் கடுமையான தீங்கு விளைவிக்கும்” என்று பிரிட்டிஷ் பொது மருத்துவபணியியல் எதிரொலிக்கிறது.
சமந்தா, தான் சிறு வயதில் அனுபவித்த சீண்டல்களால் தற்போது தன் தண்டு வடத்தில் பாதிப்புகளை உணர்வதாக நம்புகிறார்.
“பாலியல் சீண்டல் எனது மூளையில் இருந்து துண்டிக்கப்படுவதைக் குறிக்கிறது. “யாரையும் அல்லது எதையுமே நம்புவதற்கு இது மிகவும் கடினம், எனவே நான் இந்த பெரிய நிகழ்வின் மூலம் என் உடலை நம்பவில்லை” என அவர் கூறுகிறார்
டோக்ஃபோபியா நோயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸா லியுமேன், தற்போது தாய்மார்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார் பெண்களின் பங்களிப்பால் உருவாக்கப்படும் பிரசவத்தை பற்றிய விடயங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மற்றும் வாழ்க்கை மற்றும் பத்திரிகைகளில் ஒரு “எதிர்மறை”பயமூட்டும் விதமாக காட்டப்படுவதாக கூறுகிறார்.
பிறப்பிலேயே நேர்மறையான கதையை கண்டுபிடிப்பது அரிதானது”. “நான் சாதகமான உள்ளடக்கத்திற்கு ஊடகங்களை தள்ளி வருகிறேன்” என்று அவர் கூறுகிறார்
லாராவிற்கு, சுய ஹிப்னாஸிஸ், அமைதி, காட்சிப்படுத்தல் மற்றும் மூச்சு பயிற்சிகள் ஆகியவை அவளது அச்சத்தை வேலையிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவியது.
“பிரசவம் நெருங்கும் நேரத்தில் நான் முழு பீதியுடனான தாக்குதல் நிலையில் இருந்திருக்கிறேன், நான் ஏமாற்றமடைந்து, ஓய்வெடுத்துக் கொள்ளாவிட்டால், அதை எவ்வாறு பெறுவது என்பது எனக்குத் தெரியாது” என்று அவர் கூறுகிறார்.
பிறப்பிலேயே சிக்கல்கள் இருந்தபோதிலும், அவர் மிகவும் நல்ல பிரசவத்தை கொண்டிருப்பதாக கூறினார். அவரது குழந்தைக்கு இப்போது 16 மாதங்கள் ஆகிறது.
மான்செஸ்டரிலிருந்து பெக்கி, இவ்வாறு கூறுகிறார்: “டோகோபொபியாவில் பெண்களுக்கு அதிகமான ஆதரவு குழுக்கள் இருக்க வேண்டும். என் பனிக்குடம் உடைந்தபோது நான் பயந்தேன்
ஆனால் ஒவ்வொரு சுருங்குதலும் பெரிய மலைக்கு ஒரு படி என்று நான் சொன்னேன், என் குழந்தைக்கு என்னை நெருக்கமாக கொண்டு வந்தது. வலி மோசமாக இருந்தது, ஆனால் அது சமாளிக்கும்படியாக இருந்த்து, மற்றும் பிரசவ, நான் எதிர்பார்த்த்தை விட நன்றாக இருந்தது.
“டோகோபொபியா உள்ள் மற்ற பெண்களிடம் என் கதையைச் என்னால் சொல்ல முடியும் என்றால், அது அவர்களுக்கு பயத்தை போக்கும்
அதில் பெண் தான் சமந்தா “ஒரு குடும்பமாக இருந்து நீங்கள் பெறும் அனைத்து மகிழ்ச்சியையும், அன்பையும் பெறுவதற்கு என் பயத்தை அனுமதித்திருக்கிறேன்,” என அவர் கூறுகிறார்.
“இந்த பயங்கரமான பயத்தை நான் அகற்றுவேன், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் என் கனவுகளை நிறைவேற்றுவார்.”