சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் ரசிகர் ஒருவர் செய்துள்ள ஒரு விஷயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்தனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார்.
சல்மான் கான் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.
ரசிகர்
சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த ஜோடியை போட்டோஷாப் செய்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
வைரல்
சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் போட்டோஷாப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. ஒருவரையொருவர் பார்த்தால் கூட பேசாத அவர்களை வைத்து இப்படி போட்டோஷாப் செய்துள்ளார் ரசிகர்.
ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார். இந்நிலையில் சல்மான் ஆராத்யாவுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.
ஆசை
ஏம்ப்பா, ஐஸ்வர்யா திருமணமானவர் அவரை போய் இப்படி போட்டோஷாப் செய்துள்ளீர்களே என்று கேட்டால் சல்லு-ஐஸ் ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ஆசைப்பட்டு இப்படி செய்ததாக கூறுகிறார் அந்த ரசிகர்.