பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் நகரில் உள்ள லதுக்கா கிராமத்தின் பசில்கா அருகே இன்று ஆளில்லா தண்டவாளத்தை கடந்து வந்த ஒரு லாரி அவ்வழியாக வந்த டீசல் ரெயிலின் என்ஜின் மீது பயங்கரமாக மோதியது.
ஜல்லி-சிமென்ட் கலவை தயாரிக்கும் ராட்சத இயந்திரம் மோதிய வேகத்தில் ரெயிலின் டிரைவர் விகாஸ் கைய்பி என்பவர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கமாக ரெயில் விபத்துகளில் தண்டவாளத்தை கடந்து வாகனங்களில் செல்பவர்கள் உயிரிழப்பதுண்டு.
அதற்கு நேர்மாறாக, இந்த விபத்தில் ரெயிலின் டிரைவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.