மலையாள பட உலகில் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் அதிகம் உள்ளது. சினிமா துறையில் இருப்பவர்களாலும் ரசிகர்களாலும் இந்த தொல்லைகளை அவர்கள் சந்திக்கின்றனர். பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமும் அங்கு நடந்தது.
தற்போது பிரபல மலையாள நடிகை துர்கா கிருஷ்ணாவும் பாலியல் தொந்தரவில் சிக்கி உள்ளார்.
இவர் விமானம் என்ற மலையாள படத்தில் பிருதிவிராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். துர்கா கிருஷ்ணாவுக்கு செல்போனில் ஒருவர் ஆபாச வீடியோவை அனுப்பி உள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியான அவர் ஆபாச வீடியோ அனுப்பியவரின் புகைப்படத்தை தைரியமாக பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:-
அந்த நரித்தனமான மனிதர்களுக்கு மனைவி, சகோதரி, குழந்தை வயதான பாட்டி என்றெல்லாம் அடையாளப்படுத்தி பார்க்க முடியாது. பெண்களுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி செக்ஸ் ஆசைகளை தீர்த்துக்கொள்வதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கிறது. ஒருவன் எனது செல்போனில் ஆபாச வீடியோவை அனுப்பினான். நான் துணிச்சலான பெண். என்னை யாரும் பாலியல் தொந்தரவு செய்து விட முடியாது.
அந்த சைக்கோவிடம் இருந்து உங்களின் சகோதரிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். இதுபோன்றவர்களை தண்டிக்க கோரி அரசிடம் மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களை காப்பாற்ற முடியும்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.