டமாஸ்கஸின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் மனிதாபிமான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சம் நான்கு லட்சம் பேரின் நிலையை மிகப்பெரிய அவலம் என ஐக்கிய நாடுகள் சபை விவரித்துள்ளது.
அங்கு சிரியா அரச படைகளால் முற்றுகையிடப்பட்ட கடைசி கிழக்கு கோட்டாவில் குறைந்தபட்சம் ஆயிரத்து இருநூறு குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி உள்ளதாக குழந்தைகளுக்கான ஐ.நா. அமைப்பான யூனிசெஃப் தெரிவித்துள்ளது. இந்த செய்தித் தொகுப்பில் நீங்கள் பார்க்கும் சில காட்சிகள் கவலை தரக் கூடியவையாக இருக்கலாம்.