கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் வந்து கலெக்டர் ஹரிஹரனிடம் மனு கொடுத்தனர்.
விஸ்வஹிந்து பரிஷத்- பஜ்ரங்தள் மாநகர் மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வருகிற டிசம்பர் 1-ந் தேதி கோவையின் பல தியேட்டர்களில் வெளியாகவுள்ள தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி இருக்கும், ‘பத்மாவதி’ திரைப்படம் ராணி பத்மாவதி பற்றிய உண்மை சரித்திரத்தை திரித்து கூறுவதாக உள்ளது. இதை படத்தின் முன்னோட்டத்திலும், பாடல் காட்சிகளிலும் மற்றும் படக்குழுவினர் மூலமாகவும் தெரியவந்துள்ளது. வரலாற்றை மறைத்து பொய்யான கதை, காட்சிகளுடன் வரவுள்ள பத்மாவதி திரைப்படத்தை கோவை திரையிட தடை விதிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.