ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் பகுதியைச் சேர்ந்த எம்.பி.ஏ. படித்த பெண் ஒருவருக்கும், வி.கோட்டாவில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் மேதரங்கப்பள்ளியைச் சேர்ந்த ராஜேசுக்கும் நேற்று முன்தினம் காலை சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் திருமணம் நடந்தது.
வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு பெண் வீட்டில் முதலிரவுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். புதுமாப்பிள்ளை ராஜேஷ் இருந்த அறைக்கு சென்ற புதுப்பெண் சில மணி நேரத்திலேயே அறையில் இருந்து வெளியே வந்தார். அவரை, உறவினர்கள் சமாதானம் செய்து மீண்டும் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.
அறையில் இருந்த புதுமாப்பிள்ளை ராஜேஷ், தாலி கட்டிய மனைவியை வாயில் துணியை வைத்து அடைத்து அவரின் மர்ம உறுப்பு, மார்பகம் உள்ளிட்ட உடல் பாகங்களை பிளேடால் அறுத்து சித்ரவதை செய்துள்ளார். மேலும் உடலில் சில இடங்களில் கடித்தும் வைத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடி துடித்த புதுப்பெண் அறையில் இருந்து வெளியே வந்தார்.
பெற்றோரும், உறவினர்களும் விவரம் தெரியாமல் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென புதுப்பெண் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் அவரை மீட்டு சிகிச்சைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெற்றோரிடமும், உறவினர்களிடம் கண்ணீர் மல்க கூறி கதறி உள்ளார். அதனை கேட்டு மனவேதனை அடைந்த உறவினர்கள், அவரை மேல் சிகிச்சைக்காக சித்தூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த பெண் வீட்டார், புதுமாப்பிள்ளை ராஜேசை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவரை, கங்காதரநெல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசில், ரூ.60 லட்சம் செலவு செய்து திருமணத்தை நடத்திய நிலையில், எங்களுடைய மகளின் வாழ்க்கையை சீரழித்த காம கொடூரன் ராஜேஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் செய்தனர்.
புதுமாப்பிள்ளை ராஜேஷ், அனைவரிடமும் நல்ல முறையில் பேசி பழகி வந்த நிலையில் திடீரென அவர் எதற்காக சைக்கோபோல் நடந்து கொண்டார்? என்பது குறித்து உறவினர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கங்காதரநெல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.