பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து சில நாட்களில் வெளியேறிவர் நடிகை நமீதா. கடந்த வருட இறுதியில் தயாரிப்பாளர் வீர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் திருப்பதியில் நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் என அவர் கூறியிருந்தார். ஒரு சில படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் நடிப்பில் பொட்டு படம் வெளியாகவுள்ளது.
வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் அகோரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு U/A சான்றிதழை தணிக்கை கொடுத்துள்ளார்கள். இப்படத்தை வரும் ஃபிப்ரவரியில் வெளியிட படக்குழ் முடிவு செய்துள்ளார்களாம்.