நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
தற்போது கமல் அரசியல் கட்சி துவங்கிவிட்டதால் அவர் பிக்பாஸ் 2வை தொகுத்து வழங்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் அந்த தனியார் தொலைக்காட்சி தற்போது நடிகர் சூர்யா அல்லது அரவிந்த்சாமி ஆகியோரில் ஒருவரை தொகுப்பாளராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாம்.
இருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், அரவிந்த்சாமிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.