புதிதாக தமிழில் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யாவுக்கு வாழ்க்கை துணை தேடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 16 பெண்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது இறுதியாக 3 பெண்களில் வந்து நிற்கிறது.
இதில் யாரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த நேரத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பலரின் பார்வைக்கு வந்தவர் என்றால் அபர்ணதி தான். மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவது, ஆர்யாவை வாடா, போடா என கூப்பிடுவது என இருந்தார். அண்மையில் தான் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது அவரை பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி செல்வதற்கு முன் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Ready Steady Po என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.