பிரபல தொலைக்காட்சியின் பிரஜன் நடிப்பில் சின்னதம்பி என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அவருக்கு ஜோடியாக பவானி ரெட்டி என்ற நடிகை நடித்து வருகிறார்.
சீரியலில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். இந்த சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியிலேயே இவர்களுக்கு சிறந்த ஜோடி என்ற விருதும் கிடைத்தது. இந்த நேரத்தில் நடிகை பவானி ரெட்டி தனது கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து முதன்முறையாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, நானும் என் கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திடீரென்று ஒருநாள் அவர் தற்கொலை செய்துகொண்டார், நம்மோடு நெருக்கமாக இருந்த ஒருவர் உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மற்றவர்களை விட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அவருடைய இறப்புக்கு மற்றவர்கள் சொன்ன காரணம் என்னை அதிகமாக பாதித்தது. அவர் இறப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை, அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என பேசியுள்ளார்.