சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லைகளை கொடுக்கும் பிரபலங்கள் யார் என்பது பற்றி நடிகை ஸ்ரீரெட்டி வெளியீட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நானி ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் “நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண் யாரென்று அவர் குறிப்பிடவில்லை.
இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நானி இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.