கமல்ஹாசனும், கௌதமியும் ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, இடையில் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதை தொடர்ந்து கௌதமி கமல் எனக்கு சம்பளமே தரவில்லை என்று புகார் அளிக்க, பிரச்சனை பெரிதாகியது.
கமல் அரசியலுக்கு வரும் நேரத்தில் கௌதமி வேண்டுமென்றே இப்படி செய்கின்றார் என்றெல்லாம் கூறப்பட்டது.
இந்நிலையில் கௌதமிக்கு சம்பளம் கொடுக்காதது குறித்து கமலிடம் இன்று கேட்கையில் ‘கௌதமிக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது.
சம்பளம் கொடுக்கவில்லை என்று சொன்னவர், பிறகு நான் சம்பளம் கொடுத்ததை ஏன் வெளியே சொல்லவில்லை’ என்று அதிரடியாக பதில் அளித்தார்.