மலேரியா சிகிச்சைக்கான மருந்து ஒன்று 60 வருடங்களில் முதன்முறையாக அமெரிக்க அதிகாரிகளால் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மருந்து குறிப்பாக ஒருமுறை வந்தால் மீண்டும் மீண்டும் வரக்கூடிய மலேரியாவுக்கான மருந்தாகும்.
இவ்வகை மலேரியாவால் ஆண்டுக்கு 8.5 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகை மலேரியா தொற்று கல்லீரலில் தங்கி கொண்டு மீண்டும் மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை அழிப்பது கடினம்.
டஃபினான்குயின் என்னும் மருந்தை கண்டறிந்தது ஒரு “மிகப்பெரிய சாதனை” என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இனி உலகம் முழுவதும் உள்ள மேற்பார்வையாளர்கள் இதனை மக்களுக்கு பரிந்துரை செய்வது குறித்து ஆராய்ச்சி செய்வர்.
`பிளாஸ்மோடியம் விவாக்ஸ்` என்னும் ஒட்டுண்ணியால் வரும் இந்த வகை மலேரியா ஆப்ரிக்காவின் துணை சஹாரா கண்டங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மிகவும் அதிகம்.
குழந்தைகள் இந்த வகை மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஒருமுறை இந்த கொசு கடித்தால் பல முறை அவர்களுக்கு மலேரியா வருகிறது மேலும் ஒவ்வொரு முறை நோய் ஏற்படும்போது அவர்கள் மிகவும் பலவீனமாக ஆகின்றனர்.
மேலும் இந்த வகை மலேரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதால் உலகமுழுவதும் இதை அழிப்பது மிகவும் கடினம்.