எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த முகமது மோர்சி கடந்த 2013 ஆம் ஆண்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
அதை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அதில் 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் கொல்லப்பட்டனர்.
எனவே 700 பேர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தண்டனைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 75 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.