நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்காக 5 வருடங்கள் ஒதுக்கியதால் தன் திருமணத்தை தள்ளிப்போட்டார். அதன்பின் அவருக்கு திருமணம் விரைவில் என அடிக்கடி செய்திகள் வந்தபடி தான் இருந்தன.
ஆனால் பிரபாஸ் சத்தமில்லாமல் தன் அடுத்த படமான சாஹோ படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது பிரபாஸின் மாமா கிருஷ்ணம் ராஜூ பிரபாஸ் திருமணம் பற்றி ஒரு புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
“பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவர் ஒன்றும் சின்ன குழந்தை அல்ல வற்புறுத்தி திருமணம் செய்து வைக்க” என அவர் பேசியுள்ளார்.
அடுத்த வருடம் சாஹோ படம் வெளியான பிறகு பிரபாஸின் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.