காரில் ஒருபாலுறவில் ஈடுபட்ட இரண்டு மலேசிய பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கி அந்நாட்டில் உள்ள ஷரியா (மத கோட்பாடுகள் தொடர்புடைய) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெரன்காணு மாகாணத்தில் உள்ள ஷரியா உயர் நீதிமன்றத்தில் 22 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு முஸ்லிம் பெண்களுக்கும் தலா 6 பிரம்படிகள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த மாகாணத்தில் ஒருபால் உறவு தொடர்பாக பொதுவெளியில் வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுதான் என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.