சின்னத்திரை நடிகர்கள் மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் யாகாவாராயினும் நா காக்க போன்று சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் சித்தார்க்.
இவரும் இவரது மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் வீட்டிற்கு வந்த ஸ்மிரிஜா ஒரு அறையில் சென்று கதவை பூட்டியிருக்கிறார், இதனால் சித்தார்த் வெளியே தூங்கியிருக்கிறார்.
காலை வெகுநேரம் ஆகியும் தன்னுடைய மனைவி கதவை திறக்காததால் சித்தார்த் போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
காவல் துறை சித்தார்த் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தால் அவரது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
இவர்கள் திருமணம் செய்து 3 வருடங்கள் ஆவது குறிப்பிடத்தக்கது.