சினிமா பிரபலங்கள் அண்மைகாலமாக பல விபத்து சம்பவங்களில் சிக்கி வருகின்றனர். தற்போது பிரபல நடிகரான ராணாவின் அப்பாவும் தயாரிப்பாளருமான Daggupati Suresh Babu சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் கடந்த ஞாயிறு வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இரவில் 10.30 மணியளவில் Imperial Garden என்ற இடத்தில் இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியுள்ளார். இதனால் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் சதிஷ் சந்திரா, நீலம் துர்க்கா தேவி மற்றும் 3 வயது குழந்தை சித்தேஷ் சந்திரா ஆகியோர் சாலையில் தூக்கி எறியப்பட்டதால் விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இதனால் டகுபதி சுரேஷ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.