இந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் தற்போது மணிகர்ணிகா என்கிற வரலாற்று படத்தில் நடித்ததற்காக 14 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
இந்தியாவில் இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து மற்ற நடிகர்/நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.