சினிமாவில் சில உண்மை காதல் ஜோடியாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். அதே வேளையில் வேறு எப்படி இருக்கிறார்கள் உங்களுக்கும் தெரியும். கன்னட சினிமாவின் பிரபல நடிகர் துனியா விஜய்.
இவருக்கு ஏற்கனவே நாகரத்னா என்பவருடன் திருமணமாகி மோனிஷா, மோனிகா என இருமகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் கடந்த 2016 ல் மாடல் அழகியும் சாஃப்ட்வேர் பொறியாளருமான கீர்த்தி கவுடாவுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து விஜய் இவருடனேயே வாழ்ந்து வந்தாராம்.
இதனால் நாகரத்னாவுக்கு கீர்த்திக்கும் நீண்ட நாளாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தன் இருமகள்களுடன் கீர்த்தி வீட்டிற்கு சென்று அவரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதனால் நடிகர் தவித்துள்ளார்.
சம்பவத்தால் காயமான கீர்த்தி போலிசில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக இருந்த நாகரத்னாவை போலிசார் பிடித்துள்ளனர். மேலும் தன் தவறுக்காக தன் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுள்ளதால் காவல் துறை அவர்கள் இருவரை விட்டுவிட்டார்களாம்.