அமெரிக்காவில் தற்போது கொண்டாடப்பட்டு வரும் ´நன்றி தெரிவிக்கும்´ நாளை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது கிடைத்த லாட்டரி சீட்டின் மூலம் தம்பதியருக்கு சுமார் 12.7 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றான நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாடுவதற்கு விருந்தினர்கள் வருவதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக சில லாட்டரி சீட்டுகள் கிடைத்தன என்கிறார் டினா எரென்பெர்க்.
கிடைத்த லாட்டரி சீட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் இருந்த சீட்டு ஒன்றுக்கு 1.8 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது தெரியவந்ததாக அந்த தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த லாட்டரி சீட்டுகள் காலாவதியாவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.