சர்கார் படம் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வந்த படம். இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தது, இதில் குறிப்பாக ஆளுங்கட்சியை மிகவும் சீண்டுவது போல் இருந்தது.
இந்நிலையில் அரசு தரப்பில் ‘சர்கார் திரைப்படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து ’இனி எடுக்கும் திரைப்படங்களில் அரசை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிப்பது குறித்து முருகதாஸிடம் விளக்கம் பெற்று நாளை தெரிவிக்க வேண்டும்’ என முருகதாஸ் தரப்பு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.