அவுஸ்திரேலியாவில் நடந்த முக்கிய கொலை வழக்கு ஒன்றில் தீர்ப்புக்காக கொலையாளியின் பெயரிலுள்ள மற்றொரு தவறான நபர், சிறைத்துறை அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டதால் நீதிபதி கடும் விரக்தியடைந்தார்.
சைமன் பிரசர் என்பவரை கொன்றத்திற்காக 57 வயதான பீட்டர் பிரவுன் மெல்போர்னிலுள்ள விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், குற்றவாளி பீட்டர் பிரவுனுக்கு பதிலாக, அந்த வழக்கில் சம்பந்தமில்லாத அதே பெயரை கொண்ட மற்றொருவரை சிறைத்துறை அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர்.
பின்னர் தவறு நடந்தது புரிந்துக்கொள்ளப்பட்டு உண்மையான கொலையாளி நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.