தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில். பானுப்பிரியாவின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமிக்கு அவர் ஒராண்டிற்கும் மேலாக சம்பளம் கொடுக்கவில்லை எனவும், அடித்து துன்புறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
பாலியல் தொல்லை கொடுத்தது பானுப்பிரியாவின் அண்ணன் என்று கூறப்பட்டநிலையில் அவர் நடிகை விந்தியாவின் முன்னாள் கணவர் கோபால கிருஷ்ணன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2008ல் திருமணம் நடந்த நிலையில் 2012-ஆம் ஆண்டு விந்தியா விவாகரத்து செய்து கொண்டார்.
இதையடுத்து தற்போது நடிகை விந்தியா மற்றும் கோபாலகிருஷ்ணனின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.