டி.வி. நிகழ்ச்சி மூலம் புது வாழ்வு பெற்ற மூன்றெழுத்து நடிகை நடித்து, ஒரு புதிய படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறதாம்.
படுகவர்ச்சியான காட்சிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் உள்ளடக்கிய இந்த படம், ரூ.12 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறதாம்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த நடிகை தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியிருக்கிறாராம். அடுத்த படத்துக்கு ரூ.2 கோடி கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம். இதுதான் நல்ல சமயம் என்று நடிகையும் சம்பளத்தை உயர்த்த தயாராக இருக்கிறார்களாம்.