வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வசுந்தரா. சமீபத்தில் வசுந்தராவின் ஆபாச படங்கள் இணைய தளங்களிலும், வாட்ஸ்அப்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இவர் ஆடையில்லாமல் இருப்பது போன்றும், படுக்கையறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்றும் அப்படங்கள் இருந்தது. அந்த புகைப்படங்களில் இருப்பது நானில்லை என்று வசுந்தரா கூறியிருந்தார்.
இந்த சர்ச்சையில் சிக்கிய வசுந்தரா பல மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ‘புத்தர் இயேசு காந்தி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் வசுந்தரா பத்திரிகையாளராக நடிக்கிறார். இவருடன் அசோக், கிஷோர், மதுமிதா, அகில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஆனால், மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்துவிட்டது. சக மனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான் ‘புத்தன் இயேசு காந்தி’ படம்.
இப்படத்தை வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கி வருகிறார். பிளஸ்ஸிங் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார்.
அசோக்கும், வசுந்தாவும் பத்திரிக்கையாளர்கள். இவர்கள் இருவரும் ஒரு பேட்டிக்காக சிறைத்தண்டனைக் கைதி ஒருவரை சந்திக்கிறார்கள். அவருடன் மூன்று நாட்கள் பேசுகிறார்கள். அவரை மாற்ற முயல்கிறார்கள். ஆனால், அவரோ இவர்களை மாற்ற முயல்கிறார். செய்தி சேகரிக்கச் சென்றவர்களே செய்தி ஆகிறார்கள். அது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதையின் போக்கு.
இது மூன்றே நாட்களில் நடக்கும் கதை. படத்தின் பெரும்பகுதி இரவில் நிகழ்கிறது. சென்னையின் இரவு நேர இன்னொரு முகத்தை வியப்பூட்டும்படி பதிவு செய்திருக்கிறார்கள். விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.