நடிகை ஐஸ்வர்யாராய் சினிமாவில் அறிமுகமானபோது முன்னணி நடிகர்கள் அவருடன் ஜோடியாக நடிக்க போட்டி போட்டனர்.எல்லா கதாநாயகர்களுடனும் அவர் நடித்தார். அப்போது அவரைப்பற்றி கிசு கிசுக்களும் வந்தன. அபிஷேக்பச்சனை திருமணம் செய்த பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
தற்போது ஐஸ்வர்யாராய்க்கு நான்கு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். குழந்தையை வளர்ப்பதற்காக பல வருடங்கள் நடிக்காமல் இருந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஜாஸ்பா’ என்ற இந்திப்படத்தில் நடிக்கிறார். தமிழில் ஏற்கனவே இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ஐஸ்வர்யாராய் மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அப்போது இந்த வயதிலும் அழகாக இருக்கிறீர்களே எப்படி? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து ஐஸ்வர்யாராய் கூறியதாவது:-
எனது அழகு ரகசியம் என்பது பழைய வாழ்க்கையை திரும்பி பார்க்காமல் இருப்பதுதான். என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடந்து இருக்கிறது. இப்போது அவற்றில் இருந்து விடுபட்டு புது வேலையை துவங்கி இருக்கிறேன். நான் இப்போது திருமணம் ஆனவள். என் குடும்பத்தின் கவுரவத்தையும் மரபையும் கட்டிக்காக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
அதில் இருந்து எப்போதும் நழுவ மாட்டேன். யாருக்கும் காதல் இருக்கலாம். கல்லூரி வாழ்க்கையில் காதலிப்பது சகஜமானது. ஆனால் அதில் இருந்து வெளியே வந்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது. நினைக்கவும் கூடாது. அதுதான் வாழ்க்கைக்கு நல்லது. இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.